நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னல் தாக்கியதில் வங்காளதேச ஆடவர் மரணம்

ரவூப்:

மின்னல் தாக்கியதில் வங்காளதேச ஆடவர் மரணமடைந்தார் என்று ரவூப் போலிஸ் தலைவர் முஹம்மத் ஷாரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.

ரவூப், கோலா அடோக்கில் உள்ள பிரதான கிழக்கு வளைய சாலை கட்டுமானப் பணியில் நேற்று வங்காளதேச ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்தது.

சம்பந்தப்பட்ட நபர், 37 வயதான முஹம்மத் ஷாஹாங்கிர்  தனது தம்பியைத் தேடுவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கோலாலம்பூரில் வசித்து வருகிறார்.

நேற்று முதல் தனது தம்பியைப் பார்க்க கட்டுமான இடத்திற்கு வந்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

வேலை செய்து கொண்டிருந்த தனது தம்பியைச் சந்திக்க தனது பகிரப்பட்ட வீட்டிற்கும் நெடுஞ்சாலை கட்டுமான தளத்திற்கும் இடையில் நடந்து செல்லும்போது மின்னல் தாக்கியது.

இச்சம்பவத்தில் அவர் மரணமடைந்தார் என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset