நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோ லோவை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பைத் தொடர்ந்து உருவாக்கும்: புக்கிட் அமான்

கோலாலம்பூர்:

ஜோ லோவை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பைத் தொடர்ந்து உருவாக்கும்.

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தது.

1 மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் ஊழலுடன் தொடர்புடைய முக்கிய மூளையாக செயல்பட்ட ஜோ லோவை இந்த நாட்டில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளில் மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது.

மேலும் அனைத்துலக அதிகாரிகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள உள்துறை அமைச்சின் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஜோ லோவை சீனாவில் அவர் இருப்பதற்கும் அவருக்கும் தொடர்புபடுத்தும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியிருந்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட நபரை கண்டறியும் முயற்சிகளில் மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset