செய்திகள் உலகம்
தேர்தல் தோல்வியின் எதிரொலி: ஜப்பான் பிரதமர் பதவி விலகல்
தோக்கியோ -
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக சொந்தக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகினார்.
கிழக்காசிய நாடான ஜப்பானில், கடந்த ஆண்டு அக்டோபரில் எல்.டி.பி. எனும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஷிகெரு இஷிபா ஏற்றுக் கொண்டார்.
அதன் பின், 2024 அக்டோபரில் நடந்த பார்லிமென்டின் கீழ்சபை தேர்தல் மற்றும் இந்தாண்டு ஜூலையில் நடந்த மேல்சபை தேர்தல் இரண்டிலும் அக்கட்சி தன் பெரும்பான்மையை இழந்தது.
இத்தோல்விகளைத் தொடர்ந்து, எல்.டி.பி. கட்சிக்குள் இஷிபா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இஷிபா தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.
இதையடுத்து அந்நாட்டு வேளாண் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, முன்னாள் பிரதமரான யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்கு பின், ஷிகெரு இஷிபா தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
