நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் மன்னிக்கும் குணம் கொண்டவன்: பிரதமரை சாடிய மொஹைதின்

ஷாஆலாம்:

நான் மன்னிக்கும் குணம் கொண்டவன் என்று பிரதமரை பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் சாடினார்.

வெளிநாட்டவர்களுக்கு ரோன் 95 மானியங்களை வழங்குவதை ஆதரித்ததாக அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

அன்வார் குற்றம் சாட்டியபடி தனது அறிக்கை குறித்த ஊடக அறிக்கைகள் குறித்து எம்சிஎம்சியிடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் எனக்கு கிடைக்கவில்லை.

இருப்பினும் நான் மன்னிக்கும் குணம் கொண்டவன். பிரதமர் அவ்வாறு செய்ய மறுத்தால் ஏற்றுக் கொள்வதாகவும் நான் தயார்.

அன்று அவர் என்னையும் அவதூறாகப் பேசினார்.

வெளிநாட்டவர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதை நான் ஆதரித்ததாகவும் இதற்காக நான் விசாரணைக்கு உட்படுத்தபடுவேன் எனவும் அவர் கூறினார்.

இதுவரை எனக்கு எந்த புகாரும் வரவில்லை. அன்வாரும் இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.

சம்பந்தப்பட்டவரை  மன்னிப்பது எனக்குப் பரவாயில்லை.

ஆனால் இன்று வரை அவர் தொடர்ந்து அதனைப் பேசி வருகிறார். தான் தவறாகப் பேசுவது குறித்து அவர் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை.

இது போன்றவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை அகராதியில் மன்னிப்பு என்பதே இல்லை என்று தெரிகிறது.

ஷாஆலமில் நடந்த பெர்சத்து ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset