நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்தது

சிங்கப்பூர்:

மலேசிய மரண தண்டனை கைதி பன்னீர் செல்வம் பரந்தாமனின் விண்ணப்பத்தை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பில் இதனை தெரிவித்தது.

தனது முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக சிங்கப்பூர் சட்ட சங்கத்தில் அவர் அளித்த புகார் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளின் முடிவு வரும் வரை மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரப்பட்டது.

மேல்முறையீட்டுக்குப் பிந்தைய மனுவின் ஆரம்ப விசாரணையில், மரண தண்டனைகளை திட்டமிடுவது தொடர்பான உள்துறை அமைச்சின் கொள்கை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்தது.

உள்துறை அமைச்சகம் தனது கொள்கையை சட்டவிரோதமாக மாற்றியுள்ளதா என்பதையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மாநில அரசு, அரசு சாரா நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளுக்கு இடையிலான உள்துறை அமைச்சின் கொள்கை வேறுபாடு சட்டவிரோதமா என்பதையும் நீதிமன்றம் பரிசீலித்து வருவதாக நீதிபதி குழு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset