செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட கிட்டத்தட்ட 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டம், அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் முதன்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்களுக்கு விரிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் பெங்குலு மாநிலத்தில் வியாழக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட பாலர் பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை குறைந்தது 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட சமையலறையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பெங்குலு துணை ஆளுநர் மியான் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
ஊழல் வழக்கில் முதல் பெண்மணிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்த சியோல் நீதிமன்றம்
April 28, 2026, 3:59 pm
நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி அல்ல: செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான ட்ரம்ப்
April 28, 2026, 3:06 pm
விளையாட்டு வினையானது: காற்சட்டைக்குள் புகுந்த பாம்பு கடித்ததில் ஜெர்மனி பயணி பலி
April 28, 2026, 3:04 pm
