
செய்திகள் உலகம்
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கடலில் நீந்துவது, கடல் நீருடன் நேரடித் தொடர்புகொண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட Marine Dynamo கப்பலும் மால்ட்டாவில் (Malta) பதிவுசெய்யப்பட்ட கப்பலும் நேற்று தானா மேராவுக்கு அருகே மோதிக்கொண்டன.
சம்பவ இடத்துக்கு அருகில் மிதமான எண்ணெய்க் கசிவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தால் கடல் போக்குவரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் சம்பவத்தை விசாரிக்கவிருப்பதாகவும் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 4:53 pm
இலங்கைக்கு சுற்றுலா: இந்தியா்கள் மீண்டும் முதலிடம்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 1, 2025, 9:10 pm