நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எத்தனை ஆண்டுகள் தான் தோழமை கட்சியாக இருப்பது; எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி எத்தனை ஆண்டுகள்தான் தோழமை கட்சியாக இருப்பது.

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

மஇகா பேராளர் மாநாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதில் தேசிய முன்னணியில் மஇகா தொடர்ந்து இருக்க வேண்டாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வேளையில் அக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து வருகிறேன்.

காரணம் அவர் நினைத்தால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவர் அடிமட்ட உறுப்பினர்களின் குரல்களை முதலில் கேட்டு வருகிறார்.

அதன்பின் மஇகாவின் தேசியப் பேராளர் மாநாட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகா இல்லை என்றால் தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

உண்மையில் தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தோழமை கட்சியாக தான் உள்ளது.

தோழமைக் கட்சி என்ற அந்தஸ்தை மாற்ற நாங்களும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இனி எத்தனை ஆண்டுகளாக தோழமை கட்சியாக இருப்பது. ஆக எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்.

அப்போது மலேசிய மக்கள் சக்தி கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset