நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி ஒதுக்கீட்டில் இன விவகாரத்தை எழுப்ப வேண்டாம்: பிரதமர்

கோலாலம்பூர்:

நிதி ஒதுக்கீட்டில்  இன விவகாரத்தை எழுப்ப வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ்  அனைத்து மேம்பாடுகளும்  நியாயமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் அது ஒரு தரப்பு அல்லது இனம் பெறும் ஒதுக்கீட்டின் அளவு சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது.

நேற்று மேலவையில் பதிமூன்றாவது   மலேசிய திட்டத்தை தாக்கல் செய்த டத்தோஸ்ரீ அன்வார், 

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா, சரவாக்கின் பூர்வீக மக்கள்,  பெண்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரும்  தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வதில் மதானி அரசாங்கம் எப்போதும் உறுதியாக உள்ளது.

இந்த மாதிரியான சர்ச்சைகள் எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் அது மலாய்க்காரர்கள் திருப்தியடைந்து விட்டார்கள்  என்ற தோற்றத்தை அளிக்கிறது.

இந்தியர்கள் அல்லது சீனர்களும் அப்படித்தான்.

எனவே, ஒரு தரப்பு  அதிக சலுகைகளைப் பெற்றால் சண்டையிடாதீர்கள். அது இனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, தேவையை அடிப்படையாகக் கொண்டது. 

இந்திய மக்களின் நலனுக்காக நீங்கள் கேட்க விரும்பினால், தொடருங்கள். இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினர். 

ஏழைகளில் பெரும்பாலோரும் மலாய்க்காரர்கள்தான். அதனால்தான் நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset