நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கருணைமிக்க நீதிபதி பிராங்க் கேப்பிரியோ காலமானார்

நியூயார்க்:

உலகிலேயே "ஆகக் கருணைமிக்க நீதிபதியாகக்" கருதப்படும் பிராங்க் கேப்பிரியோ (Frank Caprio) நேற்று காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அவருக்கு வயது 88.
அவர் 2023ஆம் ஆண்டு முதல் கணையப் புற்றுநோயால் (pancreatic cancer) அவதிப்பட்டார்.

ரோட் ஐலண்டின் நகராட்சி நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் கேப்பிரியோ.

கேப்பிரியோ 'Caught In Providence' எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். அதில் அவர் மக்களை அக்கறையுடன் நடத்தியதற்காகப் பெயர்போனவர்.

நேற்று முன்தினம் (19 ஆகஸ்ட்) கேப்பிரியோ TikTokஇல் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமது உடல்நலம் மோசமாகியிருப்பதாக அவர் சொன்னார்.

தம்மைப் பிரார்த்தணையில் வைத்திருக்கும்படி கேப்பிரியோ இணையவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset