
செய்திகள் உலகம்
இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் மரணம்
புரூக்ளின்:
அமெரிக்காவின் புரூக்ளின் (Brooklyn) வர்த்தக வட்டாரத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் மாண்டனர்.
துப்பாக்கிச் சூடு நேற்று (ஆகஸ்ட் 17) அதிகாலையில் நடத்தப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மாண்ட ஆடவர்களில் ஒருவருக்கு 27 வயது, இன்னொருவருக்கு 35 வயது. மற்றொருவரின் வயது தெரியவில்லை.
8 பேர் காயமடைந்தனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டைப் பலர் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த்து.
பல துப்பாக்கிகளில் குறைந்தது 36 முறை சுடப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்ட நெரிசலாக இருந்தபோது இரவு விடுதியில் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.
CCTV காணொலிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிவிட்டனர்.
காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
ஆதாரம் AFP
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:28 pm
சிங்கப்பூரில் கார்களுக்கான COE கட்டணம் கடுமையாக உயர்ந்தது: ஈராண்டில் காணாத உச்சத்தைத் தொட்டது
August 19, 2025, 6:49 pm
பாலர்பள்ளி மாணவியை அடித்து உதைத்த முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
August 19, 2025, 10:43 am
BREAKING NEWS: "இஸ்ரேலுடன் எந்நேரமும் போர் தொடங்கலாம்": ஈரான் அறிவிப்பு
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
August 16, 2025, 8:13 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 16, 2025, 10:23 am
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
August 15, 2025, 4:22 pm