
செய்திகள் உலகம்
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
குவைத்:
குவைத் நாட்டில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று விஷ சாராயம் குடித்த நிலையில் 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 21 பேருக்கு நிரந்தரமாக கண் பார்வை பறிபோய் உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
August 16, 2025, 8:13 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 15, 2025, 4:22 pm
இந்தோனேசியாவில் சம்பவம்: இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் மருத்துவமனையில் அனுமதி
August 15, 2025, 12:56 pm
சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
August 14, 2025, 3:28 pm
ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை
August 14, 2025, 10:21 am
சீனா மீதான வரியை மீண்டும் ஒத்திவைத்த டிரம்ப்
August 13, 2025, 12:09 pm