நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

குவைத்: 

குவைத் நாட்​டில் இந்​தி​யர்​கள் உட்பட ஆசிய நாடு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் தொழிலா​ளர்​களாக வேலை செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் அங்கு நேற்று விஷ சாரா​யம் குடித்த நிலை​யில் 63 பேர் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டனர். இவர்​களில் பெரும்​பாலான​வர்​கள் இந்​தி​யர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து பாதிக்​கப்​பட்ட 63 பேரும் உடனடி​யாக மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயி​ரிழந்​தனர்.
 
இவர்​கள் அனை​வரும் ஆசிய நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது. இறந்​தவர்​களின் பெயர் விவரங்​கள் இது​வரை வெளி​யிடப்​பட​வில்​லை. மற்ற அனை​வருக்​கும் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 21 பேருக்கு நிரந்​தர​மாக கண் பார்வை பறி​போய் உள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset