
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
சிங்கப்பூர்:
இரவுக் கேளிக்கை விடுதிகளில் இனி மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான அறிக்கைகள் ஆங்காங்கே ஒட்டப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் சொன்னது.
சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கத்துடன் சேர்ந்து கொண்டுவரும் முயற்சியாக அது அமைகிறது.
மின் சிகரெட்டு புழக்கம் சட்டவிரோதம் என்பதையும், அது பற்றிப் புகாரளிக்கவும் இரவு விடுதிக்குச் செல்வோருக்கு நினைவூட்டுவது நோக்கம்.
அறிவிப்பில் QR விரைவுக் குறியீடு இணைக்கப்பட்டிருக்கும். அதை வருடினால் ஆணையத்தின் இணையத்தளத்தில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் செய்யமுடியும்.
சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கம் போன்ற வர்த்தக அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றினால் மின்-சிகரெட்டுகளுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் நம்புகிறது.
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
அதை வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 16, 2025, 10:23 am
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
August 15, 2025, 4:22 pm
இந்தோனேசியாவில் சம்பவம்: இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் மருத்துவமனையில் அனுமதி
August 15, 2025, 12:56 pm
சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
August 14, 2025, 3:28 pm
ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை
August 14, 2025, 10:21 am
சீனா மீதான வரியை மீண்டும் ஒத்திவைத்த டிரம்ப்
August 13, 2025, 12:09 pm