
செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
இஸ்லாமாபாத்:
கடந்த 48 மணி நேரமாக பாகிஸ்தானில் கடும் மழை பெய்து வருகிறது.
பாகிஸ்தான் மக்கள் மிகமோசமான வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் வெள்ளத்தால் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 321 பேர் மாண்டனர். அவர்களில் 15 பேர் பெண்கள், 13 பேர் சிறுவர்கள்.
மாண்டவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
குறந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிலர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.
2000 மீட்புப் பணியாளர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வட்டார மீட்பு அமைப்பு ஒன்று கூறி உள்ளது.
தொடர் மழை, சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றால் மீட்புப்பணி தடைபடுவதாகச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் பருவமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே பெய்யத் தொடங்கியதாகவும் அதன் தீவிரம் அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சில மலைப்பகுதிகளைப் பேரிடர் பகுதிகளாக அரசாங்கம் அறிவித்தது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 8:13 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 16, 2025, 10:23 am
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
August 15, 2025, 4:22 pm
இந்தோனேசியாவில் சம்பவம்: இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் மருத்துவமனையில் அனுமதி
August 15, 2025, 12:56 pm
சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
August 14, 2025, 3:28 pm
ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை
August 14, 2025, 10:21 am
சீனா மீதான வரியை மீண்டும் ஒத்திவைத்த டிரம்ப்
August 13, 2025, 12:09 pm