
செய்திகள் உலகம்
சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டின் முற்பாதியில் அதிகப் புகார்களைப் பெற்ற முதல் 10 துறைகளில் சிகையலங்காரத் துறை 9ஆவது நிலையில் உள்ளதாக CASE எனும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
இருப்பினும் கடந்த ஆண்டின் முற்பாதியில் பெறப்பட்ட 170 புகார்களைக் காட்டிலும் இந்த ஆண்டின் முற்பாதியில் சிகையலங்காரத் துறை பற்றி 167 புகார்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக CASE-இன் தலைவர் மெல்வின் யோங் (Melvin Yong) கூறினார்.
தரமற்ற சேவை, கூடுதல் கட்டணம், சேவை பற்றிய தவறான தகவல்கள் முதலியன பற்றியே பெரும்பாலும் புகார் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த ஆண்டு இதுவரை திடீரென்று மூடப்பட்ட சிகையலங்காரக் கடைகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் இழந்த தொகை சுமார் 5,600 வெள்ளி.
ஆனால் சென்ற ஆண்டு அந்தத் தொகை சுமார் 21,800 வெள்ளியாகயிருந்தது.
புகார்கள் அதிகரிப்பதைத் தடுக்க சிகையலங்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தகுதியை உயர்த்த வேண்டும் என்று HACOS எனும் அழகுப் பராமரிப்பு, சிகையலங்காரம், ஒப்பனை, நக அலங்காரச் சேவை ஊழியர்களுக்கான அமைப்பு வலியுறுத்தியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm
ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்?: காணொலி வெளியாகி பரபரப்பு
September 1, 2025, 8:46 pm