செய்திகள் இந்தியா
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
புது டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
ரஷியா- உக்ரைன் போர் நிறுத்த அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதில் பங்கேற்க உக்ரைனுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், செலென்ஸ்கியுடனான உரையாடலைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், மோதலை விரைவாகவும், அமைதியாகவும் தீர்ப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்.
இந்தியா இந்த விஷயத்தில் தனது பங்களிப்பைச் செய்யத் தயாராக உள்ளதுடன், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ùஸலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், இருதரப்பு ஒத்துழைப்பு, ராஜீய சூழல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன். போருக்கு நிதி திரட்டும் ரஷியாவின் திறனைக் குறைக்க, அதன் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இந்தப் போர் தொடர்பான எந்தவொரு முடிவும் உக்ரைனின் ஈடுபாட்டுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிப்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
