செய்திகள் இந்தியா
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
புது டெல்லி:
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 1 முதல் டெல்லி- வாஷிங்டன் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவை செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.போயிங் 787 விமானங்களின் மீதான மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, 26 விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், விமானங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிவரை இந்த நிலை நீடிக்கும்.அதேசமயம், அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
கனடாவின் டொரன்டோ, வான்கூவர் உட்பட வட அமெரிக்காவின் ஆறு இடங்களுக்கும், ஏர் இந்தியா தொடர்ந்து நேரடி விமானங்களை இயக்கும் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
