
செய்திகள் மலேசியா
மாணவர்களை பாதிக்கும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
மாணவர்களுக்கு எதிரான பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரி பல்கலைக்கழகங்கள் மட்டங்களிலும் தற்போது பகடிவதை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சபாவில் மாணவி ஷாரா கைரினாவின் மறைவு நாட்டை உலுக்கி உள்ளது.
அவரின் மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியாத நிலையில் தற்போது சம்சுஸ் ஹரிசின் மறைவு நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வலிப்பால் அம்மாணவர் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.
ஆனால் அவரின் உடலில் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து மாணவர்கள் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாணவர்களின் மரணங்களுக்கு பகடிவதை காரணமாக இருக்கலாமா என்ற கேள்விகளும் எழுகிறது.
ஆக இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்த வேண்டும்.
இச்சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:24 pm
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
August 12, 2025, 8:20 pm
ஸ்ரீ முருகன் மையத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ மு. தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 12, 2025, 6:03 pm
வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்
August 12, 2025, 12:53 pm
2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி
August 12, 2025, 12:52 pm
வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு
August 12, 2025, 12:18 pm