நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்

கோலாலம்பூர்:

வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது.

சம்சுலின் தாயார் 45 வயதான உம்மு ஹைமான் பீ தௌலட்குன் இந்த கேள்வியை எழுப்பினார்.

ஸ்கூடாய் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்  ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படையில் (PALAPES) பயிற்சி பெற்ற 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின்  காலமானார்.

என் மகனின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய தனது மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும்.

எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்காமல் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு மூலம் ஏஜிசி அலுவலகத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனது மகனின் மரணம் வலிப்புத் தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என்று நான் நம்புகிறேன்.

காரணம் உடலில் கடுமையான காயங்கள் இரத்தப்போக்கு இருந்ததாக அவர் கூறினார்.

ஆகவே உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

யாரையும் பாதுகாக்காமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த வழக்கை விசாரிக்க நிறுவப்பட்ட சிறப்புக் குழுவில் என் குடும்பத்தின் வழக்கறிஞரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.

சிம்ஸ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்  உம்மு இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset