செய்திகள் இந்தியா
ரூ.730 கோடி GST மோசடி வழக்கு: 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
புதுடெல்லி:
ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி நிறுவனங்கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்வாய்ஸ்) தயாரித்து முறைகேடான வழியில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் தியோரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மே மாதம் முதல் சுற்று சோதனை நடத்தியது.
இந்நிலையில் சிவகுமார் தியோராவிடம் நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் கூடுதல் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான புதிய மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்க துறை நேற்று 12 இடங்களில் சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் ஆவணங்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என்ற விவரத்தை அமலாக்கத் துறை பகிர்ந்து கொள்ளவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
