செய்திகள் இந்தியா
உண்மையான இந்தியரா?: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
புது டெல்லி:
கல்வான் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையின் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை "உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கமாட்டார்' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த கருத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராகுல் மீது மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்த ராகுலின் மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர் தத்தா, அகஸ்டீன் ஜார்ஜ் மாசி ஆகியோர், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் ஏன் இதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை;
2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு நம்பகமான ஆதாரம் உள்ளதா? உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்ற கருத்தை கூறியிருக்க மாட்டீர்கள்' என்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் தரப்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இக் கருத்தை ராகுல் தெரிவித்தார்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விஷயத்தை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கவலை. ராகுலை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொரப்பட்டுள்ளது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
