நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அழிந்து வரும் இன ஆமைகளை மலேசியாவிற்குள் கடத்தும் முயற்சி: இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது

பெங்களூரு:

அழிந்து வரும் இன ஆமைகளை மலேசியாவிற்குள் கடத்தும் முயற்சி இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆடவர் ஒருவர் மலேசியாவுக்கு செல்லவிருந்தார்.

அப்போது அவர் 30 இந்திய நட்சத்திர ஆமை குஞ்சுகளுடன் கைது செய்யப்பட்டார்.

29 வயதுடைய ஆஷிக் அலி என்ற நபர், கேஎல்ஐஏ செல்லும் பாத்தேக் ஏர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு இந்திய சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

அனைத்துலக வர்த்தகத்திற்கு தடை செய்யப்பட்ட அழிந்துவரும் ஆமை குஞ்சுகளை அவரின் பயணப் பெட்டியில் இருப்பதை அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆமை மறுவாழ்வு நோக்கங்களுக்காக கர்நாடக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset