
செய்திகள் மலேசியா
மண்டை ஓட்டில் காயம்; ஒரு மாதம் கொடுமைக்கு இலக்கானதே 7 மாதக் குழந்தையின் மரணத்திற்கான காரணம்: போலிஸ்
கோலாலம்பூர்:
ஒரு மாதம் கொடுமைக்கு இலக்கானதே 7 மாதக் குழந்தையின் மரணத்திற்கான காரணம்.
குறிப்பாக குழந்தையின் மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமது இதனை கூறினார்.
கடந்த புதன்கிழமை செராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு மாதக் குழந்தையின் மரணமடைந்தது.
அக்குழந்தை கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான கொடுமைக்கு இலக்காகி உள்ளது.
மேலும் பிரேத பரிசோதனை முடிவுகளில் கொடுமையால் குழந்தையின் உடல் முழுவதும் பல்வேறு காயங்கள் இருந்தன.
குறிப்பாக குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருந்தது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் வளர்ப்புத் தாயான பெண்அனுபவித்த மன அழுத்தத்தின் விளைவாக இந்த துஷ்பிரயோகம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கான காரணம் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி அழுவதால், அவரது வளர்ப்புத் தாய் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி
August 3, 2025, 10:10 am