நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு உட்பட பல புதிய தொழில் நுட்பத்துடன் கிராமப் பள்ளிகளை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு உட்பட பல புதிய தொழில் நுட்பத்துடன் சமய கிராமப் பள்ளிகளை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தற்போதைய கோரிக்கைகளுக்கு ஏற்ப முஸ்லிம்களின் நம்பிக்கை, ஒழுக்கம், குணாதிசயங்களின் கோட்டையாக இருக்கும் கிராமப் பள்ளிகளை அரசாங்கம் மீட்டெடுத்து மீண்டும் நிறுவும்.

இன்னும் பாழடைந்த நிலையில் உள்ள மதப் கிராமப் பள்ளிகள் புதிய வசதிகள், தொழில்நுட்பத்துடன் உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நிதி அமைச்சு, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை இடையேயான ஒத்துழைப்பு இந்த நடவடிக்கையில் அடங்கும்.

தகவல் தொழில்நுட்பம், இலக்கவியல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைச் சேர்க்க விரும்புகிறோம்.

இதனால் இந்தக் கோட்டை உம்மத்தின் நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தன்மையைப் பாதுகாக்கக்கூடிய வலிமையான கோட்டையாக இருக்கும்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset