செய்திகள் இந்தியா
பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. விடுவிப்பு
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் பள்ளிவாசல் அருகே குண்டு வெடித்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட ஏழு பேரை மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
2008ம் ஆண்டு நடந்த இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் 17 வருடங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். ஹிந்து பயங்கரவாதம் என்று முதன்முதலில் வெளிப்பட்ட வழக்காக இது கருதப்படுகிறது.
இந்தநிலையில், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதை என்பது நிரூபிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிளில்தான் வெடிகுண்டு பொருத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
புரோஹித்துக்கு பணம் விநியோகிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
