
செய்திகள் மலேசியா
ஜோகூருக்கும் துவாஸுக்கும் இடையில் இரண்டாம் RTS ரயில் சேவை ரயில்பாதை
ஜோகூர் பாரு:
ஜொகூர் மாநில அரசாங்கம், இஸ்கண்டார் புத்திரி (Iskandar Puteri) நகரைச் சிங்கப்பூரின் துவாஸ் பகுதியுடன் இணைப்பதற்கான இரண்டாம் RTS ரயில் சேவையை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் (Lawrence Wong) சந்தித்தார்.
இருவரின் கலந்துரையாடலின்போது அந்தப் பரிந்துரை உட்பட மேலும் சில திட்டங்கள் குறித்துப் பேசியதாகத் ஒன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்துப் பிரதமர் வோங் அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் மலேசிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜொகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் RTS ரயில் சேவை, ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் போன்ற திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையே உள்ள வர்த்தக உறவை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் சிங்கப்பூர் பிரதமர் வோங்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 10:36 pm
சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி
August 1, 2025, 10:16 pm
6,911 அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை மலேசியா பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது: தெங்கு ஸப்ரூல்
August 1, 2025, 10:09 pm
ஷாரா மரண வழக்கில் பிரமுகரின் பிள்ளை சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை: போலிஸ்
August 1, 2025, 9:08 pm
சக மாணவரை அடிக்கும் மாணவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: ஃபட்லினா
August 1, 2025, 9:05 pm
8ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்: போலிஸ்
August 1, 2025, 5:56 pm