செய்திகள் மலேசியா
அன்வார் எதிர்ப்பு பேரணி: வாக்குமூலம் அளிக்க மேலும் பல தேசியக் கூட்டணி தலைவர்களை போலிசார் அழைத்தனர்
கோலாலம்பூர்:
அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க மேலும் பல தேசியக் கூட்டணி தலைவர்களை போலிசார் அழைத்தனர்.
கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை அன்வார் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
இதில் சமூக ஊடகப் பதிவு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க போலிசாரால் அழைக்கப்பட்ட சமீபத்திய தலைவர் பினாங்கு பாஸ் இளைஞர் துணைத் தலைவர் முஹ்மமது ஹஃபீஸ் அலியாஸ் ஆவார்.
பெர்சத்து உலு லங்காட் தகவல் தலைவர் முஹம்மது ஷஃபிக் அப்துல் ஹலீம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க மற்றொரு தேசியக் கூட்டணி தேசிய இளைஞர் தலைவர் அழைக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
மலாக்கவில் கடுமையான வெள்ளம்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
