நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணி: வாக்குமூலம் அளிக்க மேலும் பல தேசியக் கூட்டணி தலைவர்களை போலிசார் அழைத்தனர்

கோலாலம்பூர்:

அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க மேலும் பல தேசியக் கூட்டணி தலைவர்களை போலிசார் அழைத்தனர்.

கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை அன்வார் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

இதில்  சமூக ஊடகப் பதிவு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க போலிசாரால் அழைக்கப்பட்ட சமீபத்திய தலைவர் பினாங்கு பாஸ் இளைஞர் துணைத் தலைவர் முஹ்மமது ஹஃபீஸ் அலியாஸ் ஆவார்.

பெர்சத்து உலு லங்காட் தகவல் தலைவர் முஹம்மது ஷஃபிக் அப்துல் ஹலீம் இந்த விஷயத்தை  உறுதிப்படுத்தினார்.

புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க மற்றொரு தேசியக் கூட்டணி  தேசிய இளைஞர் தலைவர் அழைக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset