
செய்திகள் இந்தியா
162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போலி தூதர்: விசாரணையில் போலீஸார் பகீர்
காஜியாபாத்:
உத்தர பிரதேசத்தில் போலி துாதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் கடந்த 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு 300 கோடி ரூபாய் மேல் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெஸ்டார்டிகா, மைக்ரோநேஷன் எனப்படும் அங்கீகரிக்கப்படாத சிறிய உலக நாடுகளின் துாதரகம் என்று கூறி ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்தார்.
காஜியாபாதில் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெஸ்டார்டிகா நாட்டின் கவுரவ பிரதிநிதியாக இவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னை அந்நாட்டு துாதர் எனக்கூறி வலம் வந்து 162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ரூ.300 வரையில் மோசடி செய்துள்ளது தற்போது வரையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல போலி சாமியார்களுடன் தொடர்பு வைத்து ஜெயின் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am