செய்திகள் இந்தியா
மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ்
புது டெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் 25க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் இதனை இந்தியா மறுத்துவருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்திருந்தர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணக்கம் காட்டிவருவது, இந்தியாவின் தூதரக வியூகங்களுக்கு கிடைத்த தோல்வியாகும். கடந்த 2 மாதங்களில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பிரதமர் மோடியும் அவரது புகழ் பாடுபவர்களின் கூற்றுகளும் பொய்யென அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்று மிரட்டி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தான் நிறுத்தியதாக கடந்த மே 10ஆம் தேதியில் இருந்து இதுவரை 25 முறை கூறியுள்ளார் டிரம்ப்.
பயங்கரவாத எதிர்ப்பில், அமெரிக்காவின் தனித்துவமான கூட்டாளி பாகிஸ்தான் என்று அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக்கேல் குரில்லா கடந்த ஜூன் 10ஆம் தேதி குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 18ஆம் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னெப்போதும் இல்லாதபடி பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இசாக் தாரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோ, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ஒத்துழைப்பதாக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு கடந்த 2020}இல் பிரதமர் மோடி அளித்த நற்சான்று, நமது நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது.
இப்போது, டிரம்ப்புடன் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்பது நிரூபணமாகி வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
