நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசூலிக்கப்படும் வரியிலிருந்து கால் பங்கை ஜொகூர் மாநிலத்திற்கு தருவீர்: துங்கு இஸ்மாயில்

ஜொகூர்:

ஜொகூர் மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரியிலிருந்து கால் பங்கு அதாவது 25% வருவாயை மத்திய அரசு மாநிலத்திற்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அம்மாநில இடைக்கால ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த வருவாயைத் திருப்பி கொடுத்தால் அந்நிதி மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்றார் அவர். 

மேலும், இந்த 25 விழுக்காடு வரி வருமானம், ஜொகூர் மற்ற தரப்பினரின் உதவியை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று துங்கு இஸ்மாயில் சுட்டிக் காட்டினார். 

மாநிலத்தில் பொது வசதிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி உதவியாக இருக்கும் என்று துங்கு இஸ்மாயில் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜொகூரிலிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் 20 முதல் 30 விழுக்காடு வரை திருப்பித் தருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

ஜொகூர் அரசாங்கம் ஆண்டுக்கு RM48 பில்லியன் முதல் RM49 பில்லியன் வரை வரி வருவாயை மத்திய அரசுக்கு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset