செய்திகள் உலகம்
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
இஸ்தான்புல்
கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், காசா பகுதியில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 58,479 ஆக உயர்ந்துள்ளதாக அங்குள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 93 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 278 பேர் காயமடைந்துள்ளனர். இதன் மூலம் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,39,355 ஆக உயர்ந்துள்ளது என அனடோலு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன், "பலரும் இடிபாடுகளின் கீழ் சிக்கி உள்ளனர். தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களால் மீட்பு பணியாளர்கள் அவர்களை அடைய முடியாத நிலை உள்ளது" எனவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த போரில் மாற்றம் இல்லை என்பதையும் மீண்டும் நிரூபிக்கும் வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உதவித்தொகைகளைப் பெற முயன்ற போது காயமடைந்துள்ளனர். அந்த முயற்சியில் ஆறுபேரும் உயிரிழந்துள்ளனர். மே 27ஆம் தேதிக்குப் பிறகு மட்டும், மனிதநேய உதவிகளைப் பெற முயன்ற போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 844 ஆகவும், காயமடைந்தோர் 5,604 ஆகவும் உயர்ந்துள்ளது.
மார்ச் 18ஆம் தேதி, இடைநிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்களை இஸ்ரேலின் ராணுவம் மீண்டும் தொடங்கியது. அதனுடன், ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கை மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முற்றிலும் பொருட்படுத்தப்படாமல் போனது. மார்ச் 18க்குப் பிறகு மட்டும், 7,656 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; 27,314 பேர் காயமடைந்துள்ளனர்.
போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து, கடந்த நவம்பர் மாதம், இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ மற்றும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கலாண்ட்டிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது உத்தரவு பிறப்பித்தது.
இஸ்ரேல் தற்போது காசா மீது மேற்கொண்ட தாக்குதலுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ), பழிவாங்கும் இன அழிப்பு வழக்கிலும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
