
செய்திகள் மலேசியா
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
கோலசிலாங்கூர்:
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
சிலாங்கூர் மாநிலத்தில் இயற்கையழகும், எழிழ்வளமும், நிறைந்த கோலாசிலாங்கூர் மாவட்டத்தின் இந்த கமாசான் தோட்டம் அமைந்துள்ளது.
150 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்ட இத் தோட்டத்தில் ஸ்ரீ மஹா துர்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலதத்தின் திருப்பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் குருசாமி நாகு தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சரியாக காலை 10.50க்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
அதன் பின் நடந்த பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மஹிமா தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் டான்ஸ்ரீ நடராஜா இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
ஆலயத் துணைத் தலைவர் கணேசன் ஆண்டியப்பன், செயலாளர் வேல் முருகன், பொருளாளர் சதிஸ் சங்கரலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 11:02 am