நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்

கீவ்: 

உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத அளவில் 550 டிரோன்களையும் 11 ஏவுகணைகளையும்  வீசியும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு முழுவதும் இந்தத் தாக்குதல் இருந்தது. ரஷியா வீசிய 550 ட்ரோன்களில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின.

இது, ரஷியாவின் இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாகும். இதற்கு முன்னர் இது கடந்த சனிக்கிழமை இரவு 537 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset