செய்திகள் உலகம்
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
கீவ்:
உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத அளவில் 550 டிரோன்களையும் 11 ஏவுகணைகளையும் வீசியும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு முழுவதும் இந்தத் தாக்குதல் இருந்தது. ரஷியா வீசிய 550 ட்ரோன்களில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின.
இது, ரஷியாவின் இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாகும். இதற்கு முன்னர் இது கடந்த சனிக்கிழமை இரவு 537 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 6:15 pm
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
