செய்திகள் உலகம்
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
கொழும்பு:
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்கிறது. நீண்ட கால பிரச்சனைக்கு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறுகையில், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.
அவர்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால் இலங்கையின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது.
இந்தப் பிரச்சனையை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே எழுப்புகின்றன என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:22 pm
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
July 28, 2026, 11:39 am
அமெரிக்காவின் சியெட்டலில் துப்பாக்கி சூடு சம்பவம்: 15 வயது இளைஞரைக் கைது செய்தது போலிஸ்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
