
செய்திகள் உலகம்
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
கொழும்பு:
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்கிறது. நீண்ட கால பிரச்சனைக்கு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறுகையில், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.
அவர்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால் இலங்கையின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது.
இந்தப் பிரச்சனையை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே எழுப்புகின்றன என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am