செய்திகள் உலகம்
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
பெய்ஜிங்:
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என தெரிவித்திருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:18 am
ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்கிறது ஐக்கிய அரபு அமீரகம்
March 2, 2026, 10:26 pm
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் அறிவிப்பு
March 2, 2026, 10:26 pm
குவைத் தவறுதலாக மூன்று அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது
March 2, 2026, 2:50 pm
"ஈரான் போர் குறைந்தது 4 வாரங்கள் நீடிக்கும்": அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு
March 2, 2026, 11:44 am
ஈரானின் அதிரடி தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் உயிரிழந்தனர்
March 1, 2026, 7:49 pm
ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்?
March 1, 2026, 5:05 pm
அயத்துல்லா அலி கமெனி மரணத்திற்கு கண்ணீர் வடிக்கும் மக்கள்
March 1, 2026, 11:03 am
