செய்திகள் உலகம்
ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் இந்தோனேசியாவிற்கும் நீட்டிக்கப்படலாம்: துணைப் பிரதமர் கான் கிம் யோங்
சிங்கப்பூர்:
ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் இந்தோனேசியாவிற்கும் நீட்டிக்கப்படலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong)
கூறியுள்ளார்.
ஆசியான் நாடுகளுக்கு இடையிலான கூட்டணியை முத்தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
அமெரிக்காவின் வர்த்தக வரி நீடித்து நிலைத்திருக்கும் சாத்தியம் இருப்பதாய் அவர் சொன்னார்.
வர்த்தகங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று கான் வலியுறுத்தினார்.
விநியோகச் செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கும்படியும் பல சந்தைகளில் கால்பதிப்பது குறித்து ஆராயும்படியும் அவர் வர்த்தகர்களை கேட்டுக்கொண்டார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான முயற்சிகளுக்கு அப்பால் வர்த்தகங்களும் அவற்றின் பங்கைச் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் துணைப் பிரதமருமான கான் வலியுறுத்தினார்.
கான் இந்தோனேசியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரைச் சந்தித்தார். இரு நாட்டுத் தொடர்பை வலுப்படுத்துவது நோக்கம் என்றார் அவர்.
ஆசியான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதாய் மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் துணையமைச்சர் லியூ சின் தொங் (Liew Chin Tong) குறிப்பிட்டார்.
எனினும் சூழ்நிலைகள் மாற, நாடுகளும் மாற்றத்தைத் தழுவ வேண்டும் என்று அவர் சொன்னார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
