செய்திகள் மலேசியா
30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளை கொண்டுள்ள ஆடவர் சுங்கைப்பட்டானியில் சுட்டுக் கொல்லப்பட்டார்: போலிஸ்
சுங்கைப்பட்டானி:
30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளை கொண்டுள்ள ஆடவர் சுங்கைப்பட்டானியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை செயல் இயக்குநர் ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.
ஜித்ராவில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு நபர்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்று இரவு 7.50 மணியளவில் பண்டார் புத்ரி ஜெயாவில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 34 வயதான சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது புக்கிட் அமான் போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையாகும்.
இதில் சிஐடி தலைமையிலான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல மாநிலக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பல மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒருவரைக் கண்டுபிடித்தோம்.
அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் தான் அவர்கள் கொல்லப்பட்டனர்.
சந்தேக நபரை பரிசோதித்ததன் விளைவாக, போலிசார் ஒரு துப்பாக்கி உட்பட பல பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
மேலும் சந்தேக நபருக்கு 30க்கும் மேற்பட்ட குற்றப் பின்னணிகள் உள்ளது.
குறிப்பாக 2022 முதல் தங்கக் கடைகளைக் கொள்ளையடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு குற்றவியல் குழுவுடன் தொடர்புடையவர்.
இதனால் கிட்டத்தட்ட 6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபாடில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:32 pm
மலேசியாவில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: கோலாலம்பூரில் திரண்ட தன்னார்வலர்கள்
March 13, 2026, 5:30 pm
கிள்ளானில் பரபரப்பு: போலிஸ் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற ஆடவர் கைது
March 13, 2026, 5:28 pm
வீட்டருகில் நிலம் உள்ள அரசு ஊழியர்கள் காய்கறி பயிரிட வேண்டும்: விவசாய அமைச்சர் சாபு பரிந்துரை
March 13, 2026, 5:26 pm
“அரையாண்டு வரை மலேசியாவில் உணவு தட்டுப்பாடில்லை”: டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு
March 13, 2026, 5:25 pm
காலைத் தொழுகைக்கு வரும் குழந்தைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் அல்-குட்ஸ் பெராமு பள்ளிவாசல்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி
March 13, 2026, 2:01 pm
