
செய்திகள் மலேசியா
இத்தாலிக்கான அதிகாரப்பூர்வ பயணம் 8.13 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை ஈட்டியுள்ளது: பிரதமர்
ரோம்:
இத்தாலிக்கான அதிகாரப்பூர்வ பயணம் 8.13 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை ஈட்டியுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மலேசியா - இத்தாலி பொருளாதார ஒத்துழைப்பு வட்டமேசை கூட்டம், இங்குள்ள நிறுவனங்களுடனான இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் மலேசியா 8.13 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு திறனை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இந்த வட்டமேசை கூட்டத்தில் 23 உற்பத்தித் துறை நிறுவனங்கள், ஒன்பது சேவைத் துறை நிறுவனங்கள், இரண்டு வர்த்தகத் துறை நிறுவனங்கள், ஐந்து அரசு நிறுவனங்கள், இரண்டு தொழில்துறை நிறுவனங்கள் அடங்கிய 41 இத்தாலிய நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த இரண்டு சந்திப்புகள் மூலம் அடையப்பட்ட முதலீட்டு திறன் 8.13 பில்லியன் ரிங்கிட்டாக பதிவானது.
ரோம் பயணத்தின் முடிவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 3:28 pm
சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையம்: தண்டவாளத்தில் விழுந்த ஆடவருக்குத் தலையில் பலத்த காயம்
July 4, 2025, 1:41 pm
சரியான முடிவு எடுப்பது என்பது மிகவும் கடினமானது: நிக் நஸ்மி
July 4, 2025, 1:41 pm
சிரியா ஐ.எஸ்.க்கு நிதி திரட்டிய வங்காளதேச போராளி கும்பல் மலேசியாவில் கைது: ஐஜிபி
July 4, 2025, 10:31 am
செர்டாங்கில் நாய் கடித்ததால் 3 வயது சிறுவன் காயமடைந்தான்: போலிஸ்
July 4, 2025, 10:30 am
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
July 4, 2025, 10:29 am
மலேசியர்களுக்கான விசா விலக்கை கனடா மறுபரிசீலனை செய்யும்: பிரதமர் நம்பிக்கை
July 4, 2025, 10:28 am