நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என நினைத்தேன்: அண்டை வீட்டுக்காரர்

சிரம்பான்:

வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என நினைத்தேன்.

அடையாளம் கூற விரும்பாத அண்டை வீட்டுக்கார பெண் இதனை கூறினார்.

சிரம்பான் தாமான் புக்கிட் கிறிஸ்டலில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனைத் தொடந்து  நேற்று மாலை 5 மணியளவில் அவ்வீட்டில் நடத்திய சோதனையில் மூவரின் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட அக்குடும்பம் அந்தப் பகுதிக்கு வெளியே இருப்பதாக நினைத்தோம். கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குடும்ப உறுப்பினரைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

அந்த வீட்டில் கணவன் மனைவியுடன் 30 வயதுடைய ஆட்டிசம் உள்ள ஒரு மகனும் வசிக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் என் வீட்டிற்கு வந்து நாய்க்கு உணவளித்தார். அப்போது தான் நான் அந்தக் குடும்பத்தைப் பார்த்தேன். அவர்கள் வெளியூர்களில் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர்கள் இறந்து கிடந்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset