நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல முறை லைஃப் ஜேக்கெட்டுகளை கேட்டோம்; ஆனால் படகு ஓட்டுநர் அது ஈரமாகவும் ரிசோர்ட்  மிக அருகில் தான் உள்ளது என கூறிவிட்டார்: ஆறுமுகத்தின் மனைவி வேதனை

புக்கிட் மெர்தாஜாம்:

பல முறை லைஃப் ஜேக்கெட்டுகளை கேட்டோம். ஆனால் படகு ஓட்டுநர் அது ஈரமாக இருப்பதாகவும் ரிசோர்ட் மிக அருகில் இருப்பதாகவும் கூறி அலைகலைத்து விட்டார்.

பூலாவ் பெர்ஹெந்தியான படகு விபத்தில் மரணமடைந்த ஆறுமுகத்தின் மனைவி சங்கீதா இதனை வேதனையுடன் கூறினார்.

கணவர், இரண்டு பள்ளைகளுடன் பூலாவ் பெர்ஹெந்தியான் கெச்சிலில் சாப்பிடச் சென்றோம்

சாப்பிட்ட பிறகு வானிலை மழை பெய்வது போல் இருந்ததால் நாங்கள் எங்கள் ரிசோர்ட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம்.

இரவு 9 மணியளவில் பெர்ஹெந்தியான் பெசார் வந்து, நாங்கள் வந்த அதே படகில் ஏறினோம்.

படகில் ஏறும் போது மழை பெய்யப் போவது போல் இருந்தது.

இதனால் படகில்  அதிகமாக சிறு பிள்ளைகள் இருந்தால் படகு ஓட்டுநரிடம் பல முறை லைஃப் கேக்கெட்டுகளை கேட்டோம்.

ஆனால் அவர் அது ஈரமாக உள்ளது. மேலும்  ரிசோர்ட்டுக்கான தூரம் மிக அருகில் தான் உள்ளது.

10, 15 நிமிடங்களில் போய்விடலாம். அது ஒரு பொருட்டல்ல என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் செல்லும் வழியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மிகவும் இருட்டாக இருந்தது. நாங்கள் பயணித்த  படகு ஆடத் தொடங்கியது.

நான் உடனே எனது மூத்த  பிள்ளையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். என் கணவர் இளைய பிள்ளையை பிடித்துக் கொண்டார். அப்போது ஒரு பெரிய அலை தாக்கியதால் படகு கவிழ்ந்தது.

கவிழ்ந்த படகில் இருந்து எனது ஒன்பது வயது மூத்த மகளின் கையை இழுத்து வெளியே வர முயன்றேன்.

பின்னர் அந்த பகுதிக்கு அருகில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் எங்களை காப்பாற்றியதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்தபோது நாங்கள் படகு நிறுத்துமிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். ரிசோர்ட்டின் விளக்குகளைப் பார்க்க முடிந்தது.

ஆனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது.

என் கணவர், இளைய மகள், என் கணவரின் நண்பர்களிடமிருந்தும் நான் பிரிக்கப்பட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் அவர்களிடம் என் மூத்த மகள் மட்டுமே இருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் ஒருவரால் காப்பாற்றப்பட்டோம்.

இந்நிலையில்  ஒரு தனியார் நிறுவன நிர்வாகியின் மூலம் நானும் என் மூத்த பிள்ளையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டோம்.

அதன் பின் என் கணவரின் நண்பரை அழைத்து என்ன ஆனது என்று கேட்டேன்.

அந்த நண்பர் என் கணவரும் இளைய மகளும் இறந்துவிட்டதாகவும், என் கணவரின் நண்பரின் மற்றொரு பிள்ளையும் இறந்து விட்டதாகவும் எனக்குத் தெரிவித்தார்.

இப்போது எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியவில்லை. காரணம் எல்லாம் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது.

ஆனால் இதுபோன்ற ஒரு சோகம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று தாமான் பாயு அமானில் உள்ள தனது வீட்டில் சந்தித்தபோது சங்கீதா வேதனையுடன் இதை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset