
செய்திகள் மலேசியா
ஶ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய சமுதாயம் தொடர்பான மானிய விவகாரத்தில் பாராபட்சமா?: சந்திரு கேள்வி
செர்டாங்:
ஶ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய சமுதாயம் தொடர்பான மானிய விவகாரத்தில் பாராபட்சம் காட்டப்படுகிறது என நாங்கள் நம்புகிறோம்.
இதற்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உரிய விளக்கத்தை தர வேண்டும் என செர்டாங் வட்டார இந்து சங்கத் தலைவர் சந்திரு ஜி கூறினார்.
ஶ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7 ஆலயங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள் இந்த ஶ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தமிழ்ப்பள்ளி, ஆலயம், இயக்கங்கள் வாயிலாக திட்டங்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினருக்கு நிதி ஒடுக்கப்படுகிறது.
ஆனால் அந்நிதி முறையாக எங்களுக்கு கிடைப்பது இல்லை. இதற்கான காரணம் என்னவென்று தான் எங்களுக்கு புரியவில்லை.
எனக்கு வாக்களித்தால் எல்லம் செய்கிறோம் என இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்திய சமுதாயத்தின் நலனை அவர் புறக்கணிக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது.
ஆகவே மக்களின் கேள்விகளுக்கு அவர் உரிய பதிலை தர வேண்டும் என சந்திரு ஜி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm