
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் இல்லை; அலட்சியமும் இல்லை: போலிஸ்
ஷாஆலம்:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் இல்லை. அலட்சியமும் இல்லை.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்புடன் தீ விபத்து சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிறகும், போலிசார் எந்த குற்றவியல் கூறுகளையும் கண்டுபிடிக்கவில்லை.
மேலும் விசாரணையில் நாசவேலை, துரோகம் அல்லது அலட்சியம் போன்ற எந்த கூறுகளும் இல்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த துயரத்தில் தீப்பிழம்புகள் 30 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்து. வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது.
இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை . ஆனால் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த தீ விபத்தில் 81 வீடுகள் 40% க்கும் அதிகமான கட்டமைப்பு சேதத்துடன் அழிக்கப்பட்டன. மேலும் 81 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தனழ் 57 வீடுகள் சேதமடைந்தன ஆனால் எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm