
செய்திகள் மலேசியா
கவியரசு கண்ணதாசனுக்கு விழா எடுப்பதும் அவரைப் பற்றி பேசுவதும் இலக்கிய உலகில் ஓர் ஆத்ம திருப்தி: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
கவியரசு கண்ணதாசனுக்கு விழா எடுப்பதும் அவரைப் பற்றி பேசுவதும் இலக்கிய உலகில் ஓர் ஆத்ம திருப்தியாகும்.
மஇகா உதவித் தலைவரும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கண்ணதாசன் விழா இன்று தலைநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் இம் மாபெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தலைமையேற்று பேசிய டத்தோஸ்ரீ சரவணன்,
காலத்தால் அழியாத கவியரசு கண்ணதாசன் விட்டுச்சென்ற இலக்கியங்களைக் கேட்பதும், இரசிப்பதும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
தமக்கென ஓர் உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவர்த்தியாய் அமர்ந்து கொண்டவர் கண்ணதாசன்.
அவருக்காக விழா எடுப்பதும், அவரைப் பற்றி பேசுவதும் இலக்கிய உலகில் ஓர் ஆத்ம திருப்தி.
அவ்வகையில் இன்றைய கண்ணதாசன் விழாவில் எனக்கு மட்டுமல்ல அரங்கம் நிறைந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த மனமகிழ்ச்சிதான் என்று அவர் கூறினார்.
“வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்..”
- கண்ணதாசன்
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am