நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்தவொரு அசம்பாவிதங்களை எதிர்கொள்ள மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும்: பேரரசர் சுல்தான் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

உலகளாவிய அரசியல் களம் அசாதாரண சூழலை எதிர்நோக்கியிருக்கும் சூழலில் எந்தவொரு அசம்பாவிதங்களை எதிர்கொள்ள மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும் என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கூறினார். 

இஸ்ரேல் -ஈரான் சண்டை, காசாவில் நிகழ்ந்து வரும் நீண்ட கால போர் ஆகியவற்றால் உலகின் அமைதி சீர்குலைந்துள்ளது. 

இதனால் அமைதி நிலைநாட்டவும் வட்டார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரச மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும். 

உயர் தொழில்நுட்பம் கொண்ட தற்காப்பு சாதனங்களை மலேசிய இராணுவ படை கொண்டிருப்பது அவசியமாகிறது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் சொன்னார். 

அரச மலேசிய இராணுவ படை என்றும் உண்மையாகவும் எந்தவொரு ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset