நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலி: மருத்துவர் கண்டனம்

பெய்ஜிங்: 

சீனப் பெண் மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலிக்கு மருத்துவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நெகிழி உறை நாக்கை முழுமையாக மறைக்காதபோது எப்படி கசப்பைத் தவிர்க்க முடியும் என்று அம்மருத்துவர் கேள்வி எழுப்பினார். 

நாக்கின் பின்பகுதியே அதிகமான கசப்பை உணர்த்தும் என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக்கை தெரியாமல் முழுங்கிவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படலாம் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார். 

இத்தகைய ஆபத்தான உத்திகளை இணையத்தில் பரப்பவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

South China Morning Post சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலிக்குப் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset