நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்

வாஷிங்டன்:

ஆக்சியம் 4 திட்டத்திற்காக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் டிராகன் விண்கலம் இன்று விண்ணில் பாய்ந்ததை நாசா உறுதிப்படுத்தியது.

ஆக்சியம் 4 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்குப் பயணித்துள்ளனர் என்று  நாசா தெரிவித்தது.

முன்னதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset