
செய்திகள் மலேசியா
தேர்தலிலிருந்து யாரும் வாபஸ் பெறவில்லை: வழக்கறிஞர் மதியழகன்
ஈப்போ:
எதிர்வரும் 29.6.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஆண்டுக்கூட்டமும், தேர்தலும் நடைபெறவுள்ளது என்று தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எம். மதியழகன் கூறினார்.
கடந்த 22.6.2025 (ஞாயிற்றுக்கிழமை) இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சிறப்பாக நடந்தேறியது.
அதில் துணைச்செயலாளர், பொருளாளர், இரு யாழ்பாண பிரதிநிதிகள் தேர்தலில் எந்தவொரு போட்டியும் இல்லாததால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி வெற்றிப் பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று 25.6.2025 (புதன்கிழமை) இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெறும் நாளாகும். மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை ஈப்போ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிமனையில் வேட்பாளர்கள் வாபஸ் பாரம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், இறுதி வரை யாரும் வாபஸ் பெறவில்லை என்று அவர் சொன்னார்.
ஆகையால், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தேர்தல் வரும் 29.6.2025 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.00 மணி முதல் 2.00 வரை புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார்.
இம்முறை தலைவர், துணைத்தலைவர், செயலாளர், செயற்குழுவினர் பதவிகளுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 8:25 pm
50 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா ஆகஸ்ட் 23இல் நடைபெறும்: காளிதாசன்
June 25, 2025, 12:36 pm