
செய்திகள் மலேசியா
மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் அடிக்கல் நாட்டுடன் தொடங்கியது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
பிறை:
மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் ராஜகோபுரத்தின் கட்டுமானம் அடிக்கல் நாட்டுடன் தொடங்கியது.
ஆலயத்தின் கட்டட குழுத் தலைவரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் தலைவருமான டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.
ஸ்ரீ கங்காதர சிவ பெருமான் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஆலயம் பிறை ஆற்றோரம் அமையவுள்ளது.
9 அடுக்கு ராஜகோபுரம், 5 அடுக்கு கோபுரங்கள் என இவ்வாலயம் கட்டப்படவுள்ளது. குறிப்பாக கருங்கல்லால் இவ்வாலயம் கட்டப்படவுள்ளது.
இப்படி இவ்வாலயம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமாக கட்டப்படவுள்ளது. கட்டப்படவிருக்கும் தலத்தில் ஏகதச ருத்ர ஜெப ஹோமம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
ஆலயம் கட்டும் தலத்தை சுத்தம் செய்வது இந்த ஹோமத்தின் முதன்மை நோக்கமாகும்.
அதே வேளையில் மக்கள் பசி, பட்டினி இல்லாமல் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதும் இந்த ஹோமத்தின் நோக்கமாக இருந்தது.
இதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இதன் மூலம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் எங்களுக்கு கிடைத்தது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.
முன்னதாக மஹா சன்னிதானம் தருமபுர ஆதீனத்தால் அருளப்பட்டு, கூடியிருந்த அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினார். ராஜகோபுரத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்று ஆசி வழங்கினார்.
மேலும் மலேசியாவில் தொடர்ந்து ஆலயங்களை கட்டி இறை சேவை வழங்கும் டத்தோஶ்ரீ தனேந்திரன் ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆசி வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm
ஷாரா கைரினா விசாரணை: ஐந்தாவது சாட்சி ஒரு உயிரியக்கவியல் நிபுணர் அல்ல
September 10, 2025, 2:47 pm