நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடலில் மூழ்கிய சரக்குப் படகு: மீனவர்களின் துரித செயலால் காப்பாற்றப்பட்ட 13 மலேசியர்கள்

மெர்சிங்: 

மெர்சிங், ஸ்ரீ புலாவ் தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், நீர் கசிவு காரணமாக மூழ்கிய சரக்குக் படகில் இருந்த 13 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் (APMM) 'பெங்காலாங் 43' ரோந்துப் படகு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்தச் சரக்குக் படகு முழுவதுமாக நீரில் மூழ்கியிருந்தது.

இருப்பினும், அங்கிருந்த 13 ஊழியர்களையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு உள்ளூர் படகு பத்திரமாக மீட்டிருந்தது. பின்னர், அவர்கள் அனைவரும் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, பென்யாபோங் பொதுத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

காப்பாற்றப்பட்ட 13 பேரும் 19 முதல் 63 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித காயங்களும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் மெர்சிங் கடல்சார் மண்டல இயக்குநர் சுகைசான் சாடின் தெரிவித்தார். 

உரிய நேரத்தில் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்ற உதவிய உள்ளூர் மீனவச் சமூகத்திற்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையிலான இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset