செய்திகள் மலேசியா
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
கோலாலம்பூர்:
நாட்டின் முதல் பெண் மலாயா தலைமை நீதிபதியாக பணியாற்றிய தான் ஸ்ரீ சித்தி நோர்மா யாகோப், இன்று 86 வயதில் காலமானார்.
அவரது மறைவு செய்தியை அவரது மகன் சில நேரங்களுக்கு முன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அல்லாஹ்யர்ஹம் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிமோனியா நோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1940 ஜூலை 6 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் பிறந்த சித்தி நோர்மா, நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பல முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். அதில், நாட்டின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி, மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி, மலாயா தலைமை நீதிபதி என்ற பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீதித்துறையில் 43 ஆண்டுகள் சிறப்பான சேவையை நிறைவு செய்த அவர், 2007 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
